இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

அனைத்து மதத்தினரும், திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. எனவே, 24.11.2009ஆ‌ம் தே‌தி‌க்கு‌ப் ‌பிறகு நட‌‌த்‌த‌ப்ப‌ட்ட ம‌ற்று‌ம் நடைபெற உ‌ள்ள அனை‌த்து ‌திருமண‌ங்களு‌ம் க‌ண்டி‌ப்பாக ப‌திவு செ‌ய்ய‌ப்பட வே‌ண்டு‌ம்.




இது தொடர்பாக திருமணங்களின் தலைமைப்பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழக அரசு, தமி‌‌ழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009-ஐ இயற்றி, அதன்படி கடந்த 24.11.2009 தேதியில் இருந்து தமிழக‌த்தில் நடைபெறும் பல மத‌ங்களை‌ச் சா‌ர்‌ந்த இ‌ந்‌திய குடிம‌க்க‌ளி‌ன் அனைத்து திருமண‌ங்களையும் க‌ட்டாயமாக பதிவு செ‌ய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது



`இந்து திருமணங்கள் சட்டம் 1955', `இ‌ந்‌திய கிறிஸ்தவ திருமணச்சட்டம் 1872', `சிறப்புத் திருமண‌ச் சட்டம் 1954', `முகம்மதியர்கள் ஷரியத் திருமண‌ச்ச‌ட்ட‌ம்' மற்றும் வேறு எ‌ந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இச்சட்டத்தின் பிரிவு 3-ன் கீழும், கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.



இச்சட்டத்தின்படி, பதிவுத்துறைத் தலைவர், தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும், மாவட்ட திருமணப்பதிவாளர்களாகவும் மற்றும் சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகு திருமணப் பதிவுக்கான குறிப்பாணை படிவம் 1 மற்றும் இதனுடன் இணைக்கப்பட வேண்டிய விண்ணப்பப்படிவம் 2 இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழ‌ங்க‌ப்படு‌ம்.



கட்டாய திருமணப்பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதனிலிருந்து விவரங்கள், அறிந்து படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.



திருமணப்பதிவுக்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை இரட்டையில் (இரு விண்ணப்பங்கள்) எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிடம் மற்றும் வயது தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஆதார ஆவணங்களுடன் திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100 கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின் ரூ.150) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப்பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட வேண்டும். அல்லது அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும். மேலும், திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறி அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும்.



இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் இல்லாத/ ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யாத/ உரிய கட்டணம் செலுத்தப்படாத கோரிக்கை மனுக்கள் திருமணப் பதிவாளரால் குறை சரி செய்து திரும்ப அளிக்க மனுதாரருக்கு திருப்பப்படும்.



தமிழ்நாடு திருமணப்பதிவு விதிகளின்படி மணமக்களின் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் சரித்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்படின், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப்பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால் அத்தகைய திருமணப்பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.



இந்த மறுப்பு ஆணை மீது சம்பந்தப்பட்ட நபர்கள் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்ட மேல் முறையீடு மீது மாவட்டப்பதிவாளரால் பிறப்பிக்கப்படும் ஆணை, திருப்தி இல்லையெனில் இதன் மீது ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத்துறைத் தலைவரின் ஆணையே இறுதியானது.



தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வரும் நாளான 24.11.2009 முதல் நடைபெறும் திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும் மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதிமீறல் இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும் எ‌ன்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உல‌கிலேயே ‌மிக உயரமான க‌ட்டட‌ம்

உல‌கிலேய ‌மிக உயரமான க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்ட க‌ட்டட‌ம் ஐ‌க்‌கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாயில் அமை‌ந்து‌ள்ளது. இதன் உயரம் 2 ஆயிரத்து 600 அடி ஆகும்.



புர்ஜ் துபாய் (துபாய் கோபுரம்) என்ற அந்த கட்டிடம் துபாய் நகரின் மையப்பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு உள்ளது. 100 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தை 3 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டி முடி‌த்து‌ள்ளன‌ர்.




இதை ‌விட உயரமான க‌ட்டட‌ங்க‌ள் க‌ட்டுவத‌ற்கான ‌தி‌ட்ட‌ப் ப‌ணிக‌ள் நட‌ந்து வ‌ந்தாலு‌ம், த‌ற்போதைய ‌நிலை‌யி‌ல் க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மிக உயரமான க‌ட்டட‌ம் எ‌ன்ற புகழை பு‌‌ர்‌ஜ் து‌பா‌ய் க‌ட்டட‌ம் பெறு‌கிறது.


இ‌ந்த க‌ட்ட‌ட‌த்தை‌க் க‌ட்டியவ‌ர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். இந்த கட்டிடம் வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி ‌திற‌ந்துவை‌க்க‌ப்பட இருந்தது. ‌‌சில மு‌க்‌கிய‌ப் ப‌ணிக‌ள் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.



துபாயின் மன்னராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டூம் பதவி ஏற்ற 4-வது ஆண்டு தினத்தில் இந்த கட்டிடம் திறக்கப்படுகிறது கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.



ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌ட்‌ஸி‌ல் உ‌ள்ள பல மு‌க்‌கிய சு‌ற்றுலா‌த் தள‌ங்க‌ளி‌ல் இதுவு‌ம் ஒ‌ன்றாக இணைய உ‌ள்ளது. இ‌னி து‌பா‌ய் செ‌ல்லு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளு‌க்கு‌ம், அ‌‌ப்பகு‌தி‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் வெ‌ளிநா‌ட்டினரு‌க்கு‌ம் கூட இ‌ந்த பு‌ர்‌ஜ் துபா‌ய் ‌சிற‌ந்த சு‌ற்றுலா‌த் தளமாக ‌விள‌ங்கு‌ம் எ‌ன்பதை மறு‌ப்பத‌ற்‌கி‌ல்லை.



உல‌கிலேயே ‌மிக உயரமான க‌ட்டட‌ம் எ‌ன்றது‌ம், ஒரு சாதாரண ‌விஷயமாக நா‌ம் கரு‌தி‌விட முடியாது.



100வது மாடி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ‌லி‌ப்‌ட் சேவை, நகரு‌ம் படிக‌ட்டு‌ள், குடி‌நீ‌ர் சேவை போ‌ன்றவ‌ற்றை நா‌ம் யோ‌சி‌த்தா‌ல்தா‌ன் ச‌ற்று ‌விள‌ங்கு‌ம் இத‌ன் சாதனை.



அதாவது, இ‌ந்த க‌ட்ட‌டம் முழு‌மை‌க்கு‌ம் ஒரு ‌நி‌மி‌ட‌த்‌தி‌ற்கு 10,000 ட‌ன் கு‌ளி‌ர் கா‌ற்று அனு‌ப்ப‌ப்பட வே‌ண்டு‌ம். ஒரு நா‌ள் முழும‌ை‌க்கு‌ம், இ‌ந்த க‌ட்டட‌த்‌தி‌ன் அனை‌த்து மாடிகளு‌க்கு‌ம் செ‌ல்லு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு எ‌வ்வளவு‌த் தெ‌ரியுமா? 9,46,000 ‌லி‌ட்ட‌ர்.



இ‌ங்கு இர‌ண்டு ‌லி‌ப்‌ட் வச‌திக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ஒ‌வ்வொ‌ன்று‌ம் 21 நப‌ர்க‌ள் செ‌ல்லு‌ம் வகை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த ‌‌லி‌ப்டுக‌ள் ஒரு நொடி‌க்கு 18 ‌மீ‌ட்ட‌ர் தூ‌ர‌ம் செ‌ல்லு‌ம் வகை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. உல‌கிலேயே ‌மிக உயர‌த்‌தி‌ற்கு அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌லி‌ப்‌ட் வச‌தி இதுவாக‌த்தா‌ன் உ‌ள்ளது.



இ‌தி‌ல் பல ‌உணவக‌ங்களு‌ம், ஷா‌ப்‌பி‌ங் மா‌ல்களு‌ம், ‌நிறுவன‌ங்களு‌ம், ஹோ‌ட்ட‌ல்களு‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌ந்த க‌ட்டட‌ம் ‌திற‌ந்த ‌‌பிறகு, துபா‌யி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌ல், ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌‌ட்டி‌‌ன் ச‌ரி‌ந்து‌ள்ள பொருளாதார‌ம் உய‌ர்வை நோ‌க்‌கி‌ச் செ‌ல்லு‌‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

பெண்சிசுக் கொலை - பஞ்சாப் முதலிடம்

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பெண் சிசுக் கொலை குறித்த பட்டியலில் நாட்டிலேயே பஞ்சாப் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும், ராஜஸ்தான் அதற்கு அடுத்தபடியாக வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.




கடந்த 3 ஆண்டுகளில் பெண் சிசுக் கொலை தொடர்பான குற்றங்கள் மொத்தம் 294 பதிவாகியிருப்பதாக தேசிய குற்ற பதிவேட்டு அமைப்பின் பஞ்சாப் மாநில பிரிவு வெளியிட்ட தகவல் தெரிவிப்பதாக மாநிலங்களவையில் சுகாதாரத் துறை இணையமைச்சர் தினேஷ் திரிவேதி எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டார்.



பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 81 வழக்குகளும், ராஜஸ்தானில் 51 வழக்குகளில் பெண் சிசுக் கொலை தொடர்பாக பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மத்தியப் பிரதேசத்தில் 21 வழக்குகளும், ஹரியானாவில் 18ம், சட்டீஸ்கரில் 24 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஒவ்வொரு ஆண்டுவாரியாக பதிவான வழக்குகளையும் அமைச்சர் மாநிலங்களவையில் பட்டியலிட்டார்.