சச்சின் கால்களை தொட்டு வணங்குவேன் -சுனில் கவாஸ்கர்

டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுனில் கவாஸ்கர், சச்சின் கால்களை தொட்டு வணங்க விரும்புவதாக உணர்ச்சி பெருக்கோடு கூறியுள்ளார்.

.
சச்சின் சாதனை பற்றி அவர் கூறியதாவது:

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் சேர்த்து 93 சதங்கள், ஒருநாள் போட்டியில் 17 ஆயிரத்திற்கும் மேல் ரன்கள், டெஸ்ட்டில் 13 ஆயிரத்திற்கும் மேல்ரன்கள் என வேறு யாரால் சாதிக்க முடியும்?

சச்சினின் கால்களை தொட்டு பாராட்ட விரும்புகிறேன். இந்த அளவுக்கு யாராவது சாதனைகளின் உயரத்தை தொட்டால் நான் தலைவணங்க விரும்புகிறேன்.

சச்சினின் சாதனையை நினைத்து திக்குமுக்காடிப்போயிருக்கிறேன். அவர் மேலும் பல சிகரங்களை தொடுவார். ஒருநாள் போட்டியில் 250 ரன்கள், டெஸ்ட்டில் 450 ரன்கள் போன்றவற்றை அவர் இலக்காக கொள்ள வேண்டும். இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்று தர வேண்டும்

சச்சின் டெண்டுல்கர் பேட்டி

சாதனைகள் முறியடிக்க வேண்டியவை என்றும், தன்னுடைய இரட்டை சத சாதனையை ஒரு இந்திய வீரர் முறியடித்தால் மகிழ்ச்சி அடைவேன்என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

.
குவாலியரில் நேற்றுநடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டிகள் அறிமுகமாகி 40 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை நடைபெற்ற 2961 போட்டிகளில் வேறு எந்த வீரரும் இரட்டை சதத்தை தொட்டியிராத நிலையில் முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை குவித்து ஒருநாள் போட்டிகளில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டிருக்கிறார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்னும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 194 ரன்களை குவித்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. ஜிம்பாப்வே வீரர் காவன்ரியும் 194 ரன்களை குவித்துள்ளார்.

இரட்டை சதம் அடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

எந்த சாதனையும் முறியடிக்க முடியாததல்ல; சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை. என்னுடைய சாதனையை ஒரு இந்திய வீரர் முறியடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நான் சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. கிரிக்கெட் ஆட்டத்தை நேசித்து விளையாடுகிறேன். சாதனைகள் தானாக நிகழ்த்திருக்கின்றன. இருப்பினும் சாதனைகள் மகிழ்ச்சியை தருகிறது. இந்த சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசளிப்பு விழாவின் போது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சச்சினின் இரட்டை சாதனையை கவுரவிக்கும் வகையில் சாலை ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

200 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார், தெண்டுல்கர்

இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மற்றுமொரு உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் தனி நபர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை டெண்டுல்கர் முறியடித்துள்ளார்.

தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக குவாலியூரில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுவரையில் 2962 சர்வதேச ஓருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் பெற்றுக் கொள்ளப்பட்ட முதலாவது இரட்டைச் சதம் டெண்டுல்கரினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிம்பாப்வே அணியைச் சேர்ந்த சார்ளஸ் கெவன்ட்ரியினால் ஆட்டமிழக்காது பெற்றுக் கொள்ளப்பட்ட 194 ஓட்டங்களே இதுவரையில் உலக சாதனையாக காணப்பட்டது.

இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 25 பவுண்டரிகள் அடங்களாக 200 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 47 சதங்களையும், சர்வதேச ஒருநாள் போட்டியில் 45 சதங்களையும் இதுவரையில் பெற்றுக் கொண்டுள்ளார்.

டெல் ஸ்டெய்ன், சார்ள்ஸ லங்வெர்ட், ஜெக்ஸ் கலீஸ், வெயன் பார்னல் உள்ளிட்ட வலுவான தென் ஆபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள் - வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

பழங்காலத்தில் மனிதன் ஒரே சமுதாயமாக வாழ்ந்து வந்தான். அவனுக்கும் ஆசாபாசங்கள் இருந்தது. ஆனால், எந்தத் தவறுகளுக்கும் இடங்கொடாமல் வாழ்ந்து வந்தான். காலம் செல்லச் செல்ல நாகரீகத்தின் பெயரில் சமுதாயம் வளர்ச்சி பெற்றது. கூடவே பல புதிய புதிய பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.

இதன் விளைவாக, பல நல்ல விஷயங்களும், சில கெட்ட பழக்கங்களும் கை கூடின. வளர்ச்சி, சமூக அந்தஸ்து, புதிய புதிய கண்டு பிடிப்புகள் போன்றவை சிறந்த முன்னேற்றப் படிகளாகும். அதே நேரத்தில், முறை தவறிய உடலுறவுப் பழக்கங்களும் ஏற்பட்டன. இருந்தாலும் யாருக்கும் எந்த நோயும் வரவில்லை.

இன்று இருப்பது போன்ற மேக நோய், கிரந்தி, வெட்டை போன்றவை பாங்காலத்தில் காணப்படவில்லை. அதற்கு முக்கியமான சில காரணங்கள் இருந்தன. எந்தெந்தப் பிரச்சினைகள் வந்தால் என்னென்ன மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை பெறலாம் என்ற இயற்கை மருத்துவத்தை மக்கள் தெளிவாக உணர்ந்து வைத்திருந்தனர்.

எல்லா நோய்களுக்கும் மருத்துவம் உண்டு. மருந்துகள் இல்லாத எந்த நோயும் தோன்றவேயில்லை என்பதை ஆழமாக மக்கள் நம்பினார்கள். மக்களின் சுகாதாரம் காக்கப்பட பெரியோர்களும் பெரும் முயற்சிகளை எடுத்தார்கள். இதற்காக, மருத்துவ குணங்கள நிரம்பிய பல்வேறு மூலிகைகளைக் கண்டறிந்து அவற்றைப் புனிதப் படுத்தினர். அந்த மூலிகைகளைக் கொண்டு சிகிச்சையளித்தனர்.

இம்மரங்கள் மக்கள் மறந்து விடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையோடு இருந்து அவற்றிற்கு புனித அந்தஸ்தைக் கொடுத்தனர். இவ்வாறாக, இயற்கை மருத்துவம் வளர்ச்சிப்பெற்றது.

ஆனால், பல துறவிகளும், முனிவர்களும், மேதைகளும் கூட இதன் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறவும் செய்தனர். இதன் விளைவாக புனித நூல்களிலும் இதனைப் பற்றிய குறிப்புகள் அதிகளவில் இடம் பிடித்தது.

பல புத்த, ஜைன மதத் துறவிகளும், முனிவர்களும் மருத்துவ குணங்கள் நிறைந்த மரங்களின் அடியில் அமர்ந்து தவம் இருந்தமையால் அவை தெய்வீக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துவிட்டது. அது போன்ற மரங்களில் “குங்கிலிய” மரமும் ஒன்றாகும்.

காணப்படுமிடம்

பொதுவாக குங்கிலிய மரம் தமிழகத்தில் குறைவான அளவிலேயே காணப்படுகின்றது. இவற்றில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று தம்பாகிய இரகம், மற்றது ராக்ஸ்பர்ஜி இரகம் ஆகும். தம்பாகியா குங்கிலிய மரத்தை காங்கு என்றும், தம்பாகம் என்றும் அழைப்பார்கள்.இவை கிட்டதட்ட 18 மீட்டர் உயரம் வரையில் வளரும். ராக்ஸ்பர்ஜி மரம் மேலகிரி, கல்வராயன் மலைப்பகுகிகளில் சுமார் 15 மீட்டர் உயரம் வரையில் வளர்கின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் இவற்றைக் காணலாம்.

தம்பாக்கியா குங்கிலிய மரங்கள் வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளிலும், ராக்ஸ்பர்ஜி குங்கிலிய மரம் கோவை, ஈரோடு, மதுரை மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

இந்தியக் காடுகளிலுள்ள மரங்களில் 14 சதவீத காடுகளில் குங்கிலிய மரங்கள்தான் நிறைந்து இருக்கின்றது. அஸ்ஸாம், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலுள்ள காடுகளில் இவற்றை அதிகளவில் காணலாம். ஆண்டு மழையளவு 10 சென்டி மீட்டரிலிருந்து 46 செ.மீ. வரையுள்ள பிரதேசங்களில் இம்மரங்களை அதிகளவில் காணலாம்.

மலைப்பிரதேசங்கள், பள்ளத் தாக்குகள், மேட்டு நிலங்கள் என எல்லா இடங்களிலும் மிக உயரமாக வளரும். இம்மரத்தின் அடி மட்டச்சுற்றளவு சுமார் இரண்டு மீட்டர் இருக்கும். 18 முதல் 30 மீட்டர் உயரம் வரையில் கூட இவை வளரும் தன்மை கொண்டதாகும். வளர்வதற்கு ஏற்ற நல்ல சீதோஷ்ண நிலை கிடைத்தால் சுமார் 150 அடி உயரம் வரையில் வளரும்.

வளரும் மரத்தில் பாதி உயரத்திற்கு மேல் கிளைத்து, அடர்ந்த தழையமைப்புடன் வளரும். இம்மரத்தின் பட்டை சிவப்பு நிறம் கலந்த கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் வழவழவென்று இருக்கும். பட்டையின் நீள்வாக்கில் வெடிப்புகளும் தோன்றும்.


பொதுவாக குங்கிலிய மரத்தின் இலைகள் அளவுகளில் பெரியதாக, அரை அடி முதல் ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும் கொண்டு முட்டை வடிவில் இருக்கும். குங்கிலிய இலைகள் பச்சையாக இருந்தாலும் துளிர்கள் சிவப்பு நிறத்தில் நுனி மழுங்கியிருக்கும். இதன் இலைகள் தோலைப்போன்று தடித்து இருக்கும். இதில் பூக்கள் பிப்ரவரி - ஏப்ரல் மாதங்களில் மஞ்சள் கலந்த வெண்மை நிறப் பூக்கள் அடர்த்தியாகப் பூக்கும். பூக்கள் பூத்த பிறகு, நெற்றுக்கள் உருவாகி, வளர்ச்சி அடைந்து முற்றிவிடும். இதனுள் ஒரு விதை இருக்கும். இவை உதிர்ந்து காற்றிலே பறந்து தாய் மரத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி அங்கு நிலத்தில் பட்டு பின்னர் முளைக்கிறது.

பொதுவாக, மரங்கள் விதையிட்டதிலிருந்து 15 வருடங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். குங்கிலிய இலைகளை விவசாயிகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துகின்றார்கள். தரத்தில் இது குறைந்த தரமுடையதாகும்.இதன் இலைகளைத் தைத்து வாழையிலையைப் போன்று உணவு பரிமாறவும் பயன்படுத்துகின்றார்கள்.

பொருளாதாரத்தில் குங்கிலிய மரப்பட்டை தோல் பதனிடலிலும், அட்டைகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. குங்கிலிய மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினைக்கொண்டு சாம்பிராணி, பெயிண்ட், வார்னிஷ், கார்பன் பேப்பர்கள், தட்டச்சு இயந்திர நாடாக்கள், ஓட்டுப் பலகை, ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள் போன்றவை தயாரிக்க மிகவும் பயன்படுகின்றன. குங்கிலிய விதைகளைக் கோழித் தீவனத்திலும் கலக்கச் செய்யலாம். இதன் விதைகளிலிருந்து எண்ணெயும் எடுக்கப்படுகின்றது. இவை சோப்புத் தொழிசாலைகளிலும், மிட்டாய்த் தயாரிப்பிலும் மிகவும் பயன்படுகிறது.

குங்கிலிய மரக்கட்டைகளைக் கொண்டுதான் ரயில்வே தண்டவாளங்களில் உள்ள கட்டைகள் அமைக்கப்படுகின்றன. இது தவிர உத்திரங்கள், தூண்கள், சட்டங்கள், மரப்பாலத்திற்கான பொருட்கள், இரயில் பெட்டிகள், வண்டிகள் மற்றும் பல கட்டுமானச் சாமான்கள் செய்யவும் பயன்படுகின்றது. ஆக, ஏராளமான பொருளாதாரப் பயன்களை உடையதாக இம்மரம் விளங்குகிறது.

மருத்துவ குணங்கள்

பொதுவாக, குங்கிலிய மரத்திலிருந்து எடுக்கப்படுகின்ற பிசின் சிறந்த மருத்துப் பொருளாகும். வெப்பத்தினைத் தந்து சளித்தொல்லையை அகற்றுகிறது. சிறுநீரை அதிகளவில் பெருக்கச் செய்கிறது. வெள்ளைப்பாடு, இரத்தப்போக்கு போன்ற பெண்களின் பிரச்சினைகளுக்கு இவை சிறந்த நிவாரணியாகும். சீழ்க் கட்டிகள், அதில வருகின்ற புண்கள், எலும்புகளில் தோன்றும் புண்களைப் போக்கிவிடும்.

குங்கிலிய மரத்தில் சிறுதுளிகள், வெட்டுக்களைப் போட்டு பிசினைப் பிரித்து எடுப்பார்கள். இது ஆரம்பத்தில் வெள்ளையாகவும், காய்ந்த பிறகு கருப்பாகவும் மாறிவிடும். ஒரு ஆண்டில் ஒரு மரத்திலிருந்து 4.4 கிலோ அளவில் பிசின் கிடைக்கும். இதனை “குங்கிலியம்” என்று கூறுவார்கள்.

வெள்ளைக் குங்கிலியம் வெட்டை நோய், மேக நோய், சீழ்க்கட்டிகள், நாட்பட்ட புண்கள், மூலத்தினால் உருவாகும். கட்டிகள், சொறி, சிரங்குகளைப் போக்கி குணப்படுத்துகிறது.

கருப்பு குங்கிலியம் வாயுக் கோளாறுகளால் உருவாகும் கட்டிகளைப் போக்குகிறது. காது, மூக்கு, உதடுகளில் வரும் குறைபாடுகளை நீக்குகிறது. மேகப் புண்களைக் குணப்படுத்துகிறது. மேக நோயினால் உருவாகும் தொல்லைகளைப் போக்குகிறது. சளித்தொல்லை, ஜலதோஷம், விஷத்தன்மைகளை சீர்ப்படுத்துகிறது.

இந்த குங்கிலியத்தைப் பொடி செய்து, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும். உடல் புத்துணர்வோடு இருக்கும். இன்பத்தைப் பெருக்கி உடலை கட்டுக்கோப்போடு வைத்துக் கொள்ளும்.
பெரியவர்கள், சிறு குழந்தைகளுக்கு வரும் சீதபேதியைக் குணப்படுத்த குங்கிலியத்தைச் சர்க்கரையுடன் கலந்து கொடுப்பார்கள். துர்நாற்றத்தைப் போக்கி, நல்ல நறுமணம் கமழ குங்கிலியத்தைப் புகை போடுவார்க்ள.

இதனைக்கொண்டு தைலம் கூட தயாரிக்கப்படுகின்றது. இதனை காதுகளில் ஏற்படும் வலி, கொப்பளங்கள், தோல் நோய்களுக்கும், நரம்புக் கோளாறுகளுக்கும் மருந்தாகப் பூசலாம்.

குங்கிலிய மரத்தண்டு மற்றும் இலைகள் இரத்தப் போக்கைத் தடுத்து நிறுத்த உதவுகின்றன. நாடாப் புழுக்கள், வயிற்றுப் பூச்சிகளைச் சாகடிக்கின்றன. தொற்று நோய்கள் அண்டாத வண்ணம் நம்மைக் காத்துக் கொள்கின்றன. மேலும் இவை சிறந்த வலிநிவாரிணியாக செயல்படுகின்றன. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளதால் மேக நோய், வெட்டை நோய், மேகப் புண்கள் போன்ற தவறான உடலுறவுப் பழக்கங்களால் உண்டாகும் நோய்களையும் இவை குணப்படுத்துகின்றன. வயிற்றுப் புண்கள், அல்சர், எலும்புகளில் உருவாகும் வலி, பாக்டீரியா கிருமிகளின் தொற்றுகளால் உருவாகும் பாதிப்புகள், தொழுநோய், வெள்ளைப்பாடு, இருமல், இரத்தசோகை, சொறி, சிரங்கு, புண்களுக்கு இவை நலன் தருகின்றது.

குங்கிலிய மரத்திலிருந்து வெளிப்படும் கனி இனிப்பாக இருக்கும்.இவை இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, உடலுறவில் அதிகளவு இன்பம் பெறச் செய்கின்றது. இந்திரியத்தை அதிகளவில் சுரக்கச் செய்து ஆண்மைக்கு வலிமை தருகிறது. எரிச்சல், எரி புண்களைக் குணப்படுத்துகின்றது. காசநோய், தோல் நோய்களுக்கு நல்ல நிவாரண மருந்தாக அமைகின்றது.

குங்கிலியப் பிசின் காய்ச்சல், பேதி, சீதபேதி, மண்ணீரல் வீக்கம், உடல் பருமன், மாதவிடாயின் போது வலி எண்டாதல், தலைவலி, பல்வலி, கண்களில் ஏற்படும் வலி, பார்வைக் கோளாறுகளுக்கு நன்மை தருவதாக பல ஆங்கில மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

யுனானி மருத்துவம்

யுனானி மருத்துவர்கள் குங்கிலியத்தை இரத்தபேதி, இரத்தமூலம், சிறுநீர்ப்பைக் குறைபாடுகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள். இதனைக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற “மர்ஹம் ரால்” என்ற மருந்து வெட்டை, கிரந்தி, மேகப்புண், மூலம், மூச்சுக் குழாயில் ஏற்படும் புண்களைப் போக்க வல்லது. காயங்களில் சீழ் படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. கை, கால், எலும்புகளில் ஏற்படும் கீரல்கள், வெடிப்புகளைப் போக்கவும் இந்த மருந்து பூசப்படுகின்றது.

அளவு
இதனைப் பவுடராக்கி 5 கிராம் அளவிலும், கஷாயமிட்டு 100 மில்லி அளவிலும் ஒரு வேளைக்கு உரிய மருந்தாகப் பயன்படுத்தலாம். குங்கிலியப் பிசின் 3 கிராம் அளவில் ஒரு வேளைக்குக் கொடுக்கலாம்.

அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள்

குங்கிலியப் மரக்கட்டையில் சால்கோல், கிளைக்கோசைடு ஹைடிராக்ஸி சால்கோன், பீட்டா குளுக்கோபைரானோசைடு, பாலிஃபீனால், ஹோப்பியா ஃபினால், லியூக்கோ அந்தோசயானிடின் போன்ற வேதிப் பொருட்கள் அடங்கியிருக்கின்றன. குங்கிலிய விதைகளைக் கொண்டு எடுக்கப்படுகின்ற எண்ணெயில் சைமீன், டெட்ரா ஹைடிரோ காம்மா காடினின், காடிலின் டைமீத்தைல் நாஃப்தலீன், ெட்டரா மீத்தைல் நாப்தலீன் போன்ற பல வேதிப் பொருட்கள் அடங்கியிருக்கின்றன.

இம்மரக்கட்டையில் டானின்கள் அதிகளவில் காணப்படுகின்றன.மரக்கட்டையில் 12 சதவீதமும், உலர்ந்த கட்டைத் தூளில் 40 சதவீதமும் டானின்கள் அடங்கயிருக்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படுகின்ற பிசினில் பல மருத்துவப் பொருட்கள் காணப்படுகின்றன. இவை இருப்பதனால்தான் வெட்டை, கிரந்தி நோய்களைக் குணப்படுவத்துவதாகவும், தொற்றுக் கிருமிகளை அழிக்கவல்ல தன்மைகளைப் பெற்றுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம்

குழந்தைகளுக்கு வருகின்ற சீத பேதியைக் குணப்படுத்த குங்கிலியப் பொடி ஒரு கிராம் அளவு எடுத்து, அதனுடன் சர்க்கரை கலந்து கொடுத்து வரலாம்.

குங்கிலிப் பொடி 5 கிராம், மாம் பருப்புத்தூள் 10 கிராம், இலவம் பிசின் தூள் 5 கிராம், ஜாதிகக்காய்த்தூள் 10 கிராம் இவைகளை கலந்து ஒரு வேளைக்கு ஒரு கிராம் அளவில் தொடர்ந்து கொடுத்து வந்தால், பேதி குணம்பெறும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

குங்கிலியப் களிம்பு தயாரிக்கும் முறை

ஒவ்வொரு வகை குங்கிலிய மெழுகையும் 100 கிராம் அளவில் எடுத்து, அதனை சிறு தீயிலிட்டு உருக்கி, இதில் நல்லெண்ணெய் 300 கிராம் அளவு சேர்த்து, சூடு ஆறுவதற்கு முன்பாகவே வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனைத் துணியில் தடவி புண்களின் மேல் போட்டு வரலாம். மேலும் கந்தகம், காசுக் கட்டி, வெங்காரம் இவைகளைச் சேர்த்துப் போட்டால் சிவப்பு நிறம் உண்டாக்கி அவை எளிதில் ஆறிவிடும்.

இதனை சாராயத்தில் கரைத்து, அதன் அளவு முட்டையின் வெண்கருவைச் சேர்த்துக் கலந்து மேல்பக்கமாகப் பூசி வருவதால் வாதநோய்களும், வாதத்தினால் உண்டாகும் வலிகளும் குணப்படும்.

சித்த மருத்துவர்கள் வெள்ளைப்பாடு நோயைக் கட்டுப்படுத்த குங்கிலியப் பிசினை , நெய்விட்டுப் பொறித்துத் தண்ணீரிலிட்டு நன்றாக அடித்துப் பிசைந்து, துணியில் வடிகட்டி நீரை வடித்து விடுவார்கள். துணியின் மேல் தங்கி நிற்பதை எடுத்து தக்க அளவில் கொடுத்து வந்தால் வெள்ளைப்பாடு போய்விடும். உடல் வலிமைபெறும்.

குங்கிலியத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலம், வெண்ணெய், பஸ்பம் போன்றவை மேகப்புண், வெட்டை நோய்க்கு மிகவும் நல்ல மருந்தாகும்.

குங்கிலிப் பிசினில் பூனைக்கண் குங்கிலியம் என்ற ஒரு வகை இருக்கின்றது. இது பொன்னிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் பூனைக்கண் போல் இருக்கும். இதனைக் கொண்டுத் தயாரிக்கப்படுகின்ற எண்ணெய் வீக்கத்தைக் குணப்படுத்த வல்லதாக இருக்கின்றது.

குங்கிலியம் பற்றிய புராணச் செய்தி

இந்து சமுதாயத்தில் 63 நாயன்மார்கள் பற்றிய வரலாறுகள் உண்டு. இதில் ஒருவரான..
குங்கிலியக்கலய நாயனார் என்று அழைக்கப்படும் குங்கிலியக் கலையர் திருக்கடவூரில் பிராமண குலத்தில் பிறந்தவர். இவர் இறைவனுக்கு குங்கிலிய தூபம் இடுவதையே பெரும்பணியாகக் கொண்டு தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் இதற்காகவே செலவு செய்து வறுமை நிலைக்கு ஆளானவர். உணவுக்காக நெல் வாங்கி வரக் கொண்டுபோன தன் மனைவியின் தாலியை, எதிரில் வந்த ஒரு மூட்டை குங்கிலியத்துக்கு, அந்தத் தாலியைக் கொடுத்து வாங்கிக் கொண்டு சென்று, கோயிலிலே வைத்து தூபமிட்டுக் கொண்டு நின்று தமது மனைவி, மக்கள் பட்டினியை மறந்துவிட, இந்த உறுதியைக் கண்டு சிவபிரான் இவரின் வீடெல்லாம் நெல் முதலிய நிதிகளால் நிறையச் செய்தார் எனும் செய்திகள் காணக்கிடைக்கின்றன.

நட்சத்திர ரகசியம்!

வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை எண்ண முடியாது. நட்சத்திரங்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் என்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இவற்றின சராசரி வயது 1500 கோடி ஆண்டுகள் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். இதில் பெரும்பாலான நட்சத்திரங்கள் பத்து லட்சம் முதல் 1000 கோடி ஆண்டுகள் ஆயுள் உடையவை. இந்த நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் 75 சதவிகிதமும், ஹீலியம் 22 சதவிகிதமும், ஆக்சிஜன், நியான், கார்பன் நைட்ரஜன் வாயுக்களும் சில பங்கு கலந்துள்ளன.

வானில் மின்னும் நட்சத்திரங்களில் சில சூரியனை விட நூறு மடங்கு அதிக எடை கொண்டவையாகும். சூரியனில் 20 ல் 1 பங்கு எடை கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.

சூரியனைத் தவிர்த்துவிட்டு, பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ஆல்பா செண்டாரி. இது பூமியில் இருந்து 4.3 ஒளி ஆண்டு தூரத்தில் உளள்து. ஒரு ஒளி ஆண்டு என்பது, ஒளியானது ஓர் ஆண்டில் பயணிக்கும் தூரமாகும்.

நமக்கு மிகத் தூரத்தில் உள்ள நட்சத்திரம் தேனேப். இது பூமியில் இருந்து 1600 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. ஆயினும் ‘மில்கிவே’ எனப்படும பால்வெளியில் 100 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் பல நட்சத்திரங்கள் உள்ளன.

நட்சத்திரங்களில் பிரகாசமானது சிரியஸ். 20 கி.மீ., விட்டம் முதல் 1600 கோடி கி.மீ., விட்டம் வரை கொண்ட நட்சத்திரங்கள் வானில் மிதக்கின்றன. வெள்ளை, நீலம், மஞ்சள், சிகப்பு நிறங்களில் நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. நட்சத்திரத்தின் மேற்பகுதியில் காணப்படும் வெப்ப அளவின் அடிப்படையில் அதன் நிறம் மாறும்.

நட்சத்திரத்தின் நிறம் நீலம் என்றால் அதன் மேற்புறத்தில் 28 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் தகித்துக்கொண்டிருக்கிறது என்று பொருள். சிகப்பு நிறம் என்றால் 2800 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும். நட்சத்திரங்களின் உள்பகுதியில் பொதுவாக 11 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும் . அணுக்கள் வெடிப்பு மூலம் இந்த சக்தியை நட்சத்திரங்கள் பெறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சீனாவிலிருந்து வெளியேறுகிறது கூகுள்?


தங்கள் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என சீனா மிரட்டல் விடுத்துள்ளதால் அந்நாட்டிலிருந்து வெளியேற நேரிடும் என பிரபல இணைய தேடல் நிறுவனமான கூகுள் தெரிவித்துள்ளது. 

கம்யூனிஸ்ட் நாடான சீனாவில், அந்நாட்டை பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகளை வெளியிடுவதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. அரசு தரப்பு ஏஜென்சி மூலமே செய்திகள் ஊடகங்களுக்கு அளிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற மாணவர் கிளர்ச்சியையும், போராட்டத்தின்போது தியான்மர் சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டதையும் சீன அரசு இரும்புத் திரை போட்டு மறைத்துவிட்டது. 

அது மட்டுமல்லாது இதேப்போன்ற மேலும் பல போராட்டங்களையும் சீன அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிட்டது. ஆனால் அப்போது ஏராளமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாக குற்றச்சாற்று எழுந்தன. இருப்பினும் அவை வெளிவராமல் சீன அரசால் பார்த்துக்கொள்ளப்பட்டன. 

ஆனால் சீன அரசின் இதுபோன்ற கறுப்பு பக்கங்கள் இணைய தள பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 'பிளாக்' எனப்படும் வலைப்பூக்களில் சீன அரசின் அடக்குமுறைகள் குறித்த கட்டுரைகள் ஏராளமாக இடம்பெறத் தொடங்கின. அத்துடன் சீன அரசு மறைக்க நினைக்கும் தகவல்கள் மற்றும் செய்திகள் இணைய தளங்களில் வெளியாகிவிடுகிறது. 

இது சீன அரசுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் கூகுள் நிறுவனத்தின் சீன செயல்பாட்டிற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக அயல்நாடுகளில் இயங்கும் மனித உரிமை குழுக்களின் இணைய தளங்கள் மற்றும் பிளாக்குகளுக்கு தடை விதித்தது. 

சீன அரசின் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக, தாங்கள் தங்களது சேவையை விலக்கிக்கொண்டு சீனாவிலிருந்து வெளியேற நேரிடும் என கூகுள் எச்சரிக்கை விடுத்தது. 

ஆனாலும் கூகுளின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத சீன அரசு, தங்கள் நாட்டில் செயல்பட வேண்டுமென்றால் தங்கள் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் இயங்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

பீஜிங்கில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் மா ஜாக்ஸு, பொதுமக்களின் நலன்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பாரியம் போன்றவற்றை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என்றார். 

எனவே சீனாவில் இயங்கும் அயல்நாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்க வேண்டும் என்றும், இதற்கு கூகுள் மட்டும் விதிவிலக்கு அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.

அதிமனிதனைத் தோற்றுவிப்பதே நமது யோகத்தின் நோக்கம் - ஸ்ரீஅரவிந்தர்

இவ்வுலக வாழ்க்கையிலேயே நமது யோகம் நடைபெற வேண்டும், எங்கோ தொலைவில் அப்பாலுக்கப்பால் உள்ள மோனானந்தத்தில் அல்ல. சாதாரணமாக நமது சிந்தனை, நமது அறிவு, நமது உணர்ச்சி, நமது ஜீவன் எல்லாம் ஆழமில்லாமலும், குறுகியதாயும், சிதறிப்போனதாகவும் உள்ளன.



இவையெல்லாம் ஆழ்ந்த, பரந்ததோர் ஆன்ம உணர்வாக உருமாற்றமடைய வேண்டும். அகவாழ்வும் புறவாழ்வும் ஒன்ற வேண்டும். மனித வாழ்வு தெய்வ வாழ்வாக மலர வேண்டும். இந்த மகத்தான மாற்றமே நமது யோகத்தின் முதன்மையான இலட்சியமாகும். நமது உள் ஜீவன் முழுவதையும், நமது புற இயற்கை முழுவதையும் இறைவனுக்கே என்று அர்ப்பணித்துவிடுதல், இந்த அதி உன்னத இலட்சியத்தை அடைவதற்கான உபாயமாகும். நமது உள்ளத்தே கோயில் கொண்டுள்ள அந்தர்யாமிக்கே, அனைத்துலகாய் விரிந்துள்ள விஸ்வேஸ்வரனுக்கே, அனைத்திற்கும் அப்பால் அனைத்திற்கும் மூலமாய் உள்ள பரமேஸ்வரனுக்கே எல்லாவற்றையும் கொடுத்துவிட வேண்டும். நமது இச்சா சக்தி, நமது இதய உணர்ச்சி, நமது சிந்தனையெல்லாம் ஏகனாயும் அநேகனாயும் உள்ள இறைவன் மீதே பரிபூரணமாக ஒன்றி நிற்க வேண்டும். எதையும் விட்டுவைக்காமல் நமது ஜீவன் முழுவதையும் இறைவன் ஒருவனுக்கே அர்ப்பணமாக்க வேண்டும். இவ்வாறு மனிதச் சிறு அகந்தை தன்னைவிட அனந்தம் மடங்கு பெரிதான பரம் பொருளின்பால் திரும்பி, தன்னை அதற்கு அர்ப்பணித்து பரிபூரண சரணாகதியடைதலே இந்த யோகத்தின் அடிப்படையான இயக்கமாகும்.

மேன்மேலும் உணர்வில் வளர்ச்சியடைந்து, விரிவடைந்து ஜீவனின் ஆழத்தில் மொட்டாயிருக்கும் தெய்வத்தன்மை முழு மலர்ச்சியடையச் செய்வதே மனிதப் பிறவியின் நோக்கம்... இக்காரியத்தையே இயற்கைப் பரிணாமம் செய்து வருகிறது. ஆனால் இயற்கை வழியில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகின்றது, குழப்பங்கள், தவறுகள், திசை மாறுதல், பின் செல்லுதல் போன்ற தடைகள் உண்டாகின்றன. இயற்கையின் நத்தை வேகத்தைத் துரிதப்படுத்தி, கூடியவரை நேரே சென்று இப்புவிக்கு நாம் வந்த உன்னத நோக்கத்தை விரைவில் நிறைவேற்றுவதே நமது யோகத்தின் குறிக்கோள்.

விரிவான பொருளில் குறிக்கோள், இலட்சியம் என்றெல்லாம் பேசுவது தவறெனில் சொல்லலாம். ஏனெனில் முன்னேற்றத்திற்கு முடிவே இல்லை. இருப்பினும், உடனடியாக அடுத்தபடியாக அடைய வேண்டிய ஓர் இலட்சியம் இருக்க முடியும். மனிதனின் இப்போதைய நிலையைத் தாண்டி அவனது ஆன்மா அடைய முயலும் ஒரு நிலையே அது. இப்போதுள்ள நிலையைவிட உயர்ந்த, பரந்த ஜீவநிலைக்கு உயரவும் அந்நிலை கீழிறங்கி வந்து அவனுடைய பல்வேறு பாகங்களையும் உருமாற்றவும் முடியும். அவனுடைய உணர்வு விரிவடைந்து ஒளிபெற்று அவன் முக்தனாகவும் சித்தனாகவும் ஆகலாம். இந்த மாற்றம் தனி மனிதனளவில் நில்லாது உலகில் பரவினால் ஒரு தெய்வீக மனித இனம் அல்லது புதியதோர் அதிமனித இனம் தோன்றலாம். இந்த புதிய தெய்வீகப் பிறப்பே நமது இலட்சியம்.

மனித உணர்விலிருந்து தெய்வ உணர்விற்கு வளர்தல், நமது ஆன்மா மட்டுமின்றி நமது இயற்கைப் பாகங்களும் பூரணமாக தெய்வத்தன்மை அடைதல் - இதுவே நமது யோகத்தின் முழுப் பொருளும். தெய்வீக மனித இனம் அல்லது அதிமன இனத்தின் இலட்சணம் என்ன? குறுகிய புறஞ்செல்லும் அகந்தையை விரட்டிவிட்டு அந்த இடத்தில் இறைவனை அரியாசனம் ஏற்ற வேண்டும். அகந்தையை அகற்ற வேண்டுமானால் ஆசையை விட்டொழிக்க வேண்டும், இப்பொழுதுள்ளதுபோல் ஆசை நிறைவேற்றமே மனித வாழ்வின் நோக்கமாயிருக்கக் கூடாது.


பிராணனிலுள்ள ஆசை களையப்படுவது போலவே தடுமாறும் மனத்தின் அரைகுறை உண்மைகளும், பிழைகளும், பிளவுபட்ட, அகங்கார, குறுகிய சிந்தனையும் அறிவும் மறைய வேண்டும். அது படிப்படியாக வளர்ந்து சுயஞ்சோதியாக, உண்மை - உணர்வாகப் பரிணமிக்க வேண்டும். இவைபோலவே நமது தெளிவற்ற சிறு நோக்குக் கொண்ட அகங்கார இச்சா சக்தியும் மறைந்து அதன் இடத்தில் இறைவனது இச்சா சக்தியோடு ஒத்தியங்குவதும் தெளிவும், வலிமையும், வேகமும் கொண்டதும், பிழையும் தடுமாற்றமும் அற்றதுமான ஓர் உன்னத இச்சா சக்தி வேலை செய்ய வேண்டும். உண்மையான திருப்தி அளிக்க முடியாத, மேலெழுந்தவாரியான, பலவீனமான, அகங்கார உணர்ச்சிகளெல்லாம் விலக்கப்பட்டு அங்கு ஆழ்ந்து பரந்த சைத்திய உள்ளம் வெளிப்பட வேண்டும். நமது உணர்ச்சிகளெல்லாம் இறைவன் கோயில் கொண்டுள்ள இந்த சைத்திய உள்ளத்தால் தூண்டப்பட்டு தெய்வ அன்பாகவும் தெய்வானந்தமாகவும் புடமிடப்பட வேண்டும். இத்தகைய அதிமனிதனைத் தோற்றுவிப்பது நமது யோகத்தின் நோக்கமாகும்.

சாதாரண மனித வாழ்வில் முக்கால் பாகத்திற்குமேல் புறத்தே செல்லும் செயல்களாகவே அமைந்துள்ளது. ஞானி, பக்தன், சிந்தனையாளன், கவிஞன், ஓவியன் போன்ற மிகச் சிலரே உள்ளாழ்ந்து வாழ்கின்றனர். இந்த இரண்டும் இணைந்து அவை இரண்டிற்கும் மேலான ஒன்றாக மாறுவதே பூரண வாழ்வாகும். அறிவினாலும், அன்பினாலும் இறைவனுடன் ஒன்றும், ஞான, பக்தி யோகங்கள் மட்டும் இந்த நிலையை அடையப் போதாது. ஆகவே இச்சா சக்தியாலும் செயலாலும் இறைவனுடன் நம்மை ஒன்றச் செய்யும் கர்மயோகமும் பூரண யோகத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்.

நமது சிந்தனையுடன் உணர்ச்சிகளும் மாற்றம் அடைந்து, ஆனால் அதே மாற்றம் நமது செயல்களிலும் ஏற்படாவிட்டால் நமது சித்தி பூரணமாயிராது.

ஆனால் இந்தப் பூரணமான மாற்றம் ஏற்பட வேண்டுமானால் நமது மனத்தையும் இதயத்தையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்தால் மட்டும் போதாது. நமது செயல்களையும் அர்ப்பணிக்க வேண்டும். நமது செயலாற்றல்களையெல்லாம் நமக்குப் பின்னால் நிற்கும் தெய்வ சக்தியின் கரங்களில் ஒப்படைத்துவிட வேண்டும். நான் கர்த்தா, தொழில் புரிவோன் என்ற உணர்வு மறைந்துவிட வேண்டும். இதை ஒரே நாளில் செய்து விட முடியாது. படிப்படியாகச் செய்ய வேண்டும். தெய்வ சக்தி நேரிடையாக நமது திறமைகளை பயன்படுத்தும்படிக்கு புறத்தோற்றங்களுக்குப் பின்னாலுள்ள இறைவனின் இச்சா சக்தியின் கரங்களில் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் மறைவாயுள்ள இறைவனது சக்தியே நமது செயல்களுக்கெல்லாம் மூலம். இறைவனது இச்சா சக்தியின் அநுமதியின்றி நாம் செயல்பட முடியாது.

நமது சிறிய, கோணலான வாழ்வும் வினைகளும் முற்றிலும் மாற்றமடைந்து தெய்வ வாழ்வு, தெய்வ இச்சாசக்தி, தெய்வ ஆற்றல் இவற்றின் வெள்ளமாக இவை பாய வேண்டும். இப்பொழுது மறைவாக நின்று நமது வாழ்வையும் செயல்களையும் தாங்கும் அவை நேரடியாகப் பெருக்கெடுக்க வேண்டும். நமது இயற்கைப் பாகங்கள் முற்றிலும் உருமாற்றமடைந்து சர்வ தூய, தடையற்ற, மகிழ்தேற்கும் வாய்க்கால்களாக ஆக வேண்டும். மேலே விளக்கப்பட்டுள்ள பூரண நிவேதனமும் பரிபூரண சரணாகதியும் அவற்றின் பயனாய் வரும் முழுமையான திருவுருமாற்றமும் வெளிப்பாடுமே பூரண கர்மயோகத்தின் அடிப்படையான உபாயமும் இலட்சியமுமாகும்.

ந‌ன்‌‌றி : வைகறை
(ஸ்ரீஅர‌வி‌ந்த‌‌ர் ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)
பி‌ப்ரவ‌ரி 21
 

நீங்கள் பிரபஞ்சத்தின் குழந்தைகள்

இறை சக்தி நம்மைத் துக்கப்படுத்திப் பார்ப்பதற்காக உருவாக்கவில்லை.

நம் மூலமாக அது வாழுகின்றது. நம் மூலமாக அது தன்னை பூர்த்தி செய்து கொள்கிறது. நம் மூலமாக அதன் முழுமையை வெளிப்படுத்துகின்றது.

FILE
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். சில நேரத்தில் நான் பார்ப்பதுண்டு. சிலர் தாங்கள் நினைத்ததைத் தங்கள் குழந்தைகள் மூலமாகப் பூர்த்தி செய்வார்கள். சில பேருடைய குழந்தைகளும் அவர்களைப் பூர்த்தி செய்வார்கள்.

நாம் பிரபஞ்சத்தின் குழந்தைகள். பிரபஞ்சம் ஆனந்தத்தின் வெளிப்பாடு.

எல்லாமே ஆனந்தமாகத்தான் இருக்க முடியும்.

நாம் ஆனந்தமாக வாழ்ந்தோமானால், பிரபஞ்சம் நம் மூலமாக எதை அடைய வேண்டுமென்று நினைக்கிறதோ, அதை நிறைவேற்றிக் கொள்ளும். அப்போது நாம் பிரபஞ்சத்தின் இச்சையைப் பூர்த்தி செய்கின்றோம்.

அதாவது, நம்முடைய குடும்பத்தில் பார்த்தோமென்றால், அப்பா சொத்து எழுதி வைத்திருப்பார். அதேசமயம், ஏதாவதொரு கடமையையும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார். "இந்த சொத்தெல்லாம் உனக்குத்தான். ஆனால், வருடத்தில் ஒரே ஒரு முறை அண்ணாமலையாருக்கு ஒரு மண்டகப்படி நடத்திவிடு" என்று எழுதியிருப்பார்.

அந்தக் கடமையைச் செய்தேமானால், சொத்தை அனுபவிப்பதற்கான தகுதி உண்டு. ஆனால், அந்தக் கடமையைச் செய்யவில்லை என்றால், சொத்தை அனுபவிப்பதற்கான தார்மீகமான தகுதி நமக்குக் கிடையாது.

இந்தப் பிரபஞ்சம், கடவுள் நமக்கு அளித்த சொத்து. அவர் நமக்கு இட்டிருக்கின்ற கட்டளை, "ஆனந்தமாக வாழுங்கள்."

"ஆனந்தமாக வாழுங்கள்" என்ற அவருடைய விருப்பத்தை "ஜீவன் முக்தர்களாக வாழுங்கள்" என்று அவர் கொடுத்த பொறுப்பை வாழ்வோமானால், இந்தப் பிரபஞ்சத்தை அனுபவிப்பதற்கான சுதந்திரம், தார்மீகமான உரிமை நமக்கு உண்டு.

ஆனால், அவர் சொன்ன மாதிரி "ஜீவன் முக்தர்களாக" நாம் வாழவில்லை என்றால், அவர் கொடுத்த இந்த சொத்தை அனுபவிப்பதற்கான எந்தவிதமான தார்மீக உரிமையும் நமக்கு இல்லை.ஆழமாக, ஆழ்ந்து இந்த சத்தியங்களைப் பார்த்தீர்களென்றால், அடிப்படையாக சில விஷயங்கள் புரியும். வாழ்க்கை "ஜீவன் முக்தனாக" வாழ்வதற்கு அளிக்கப்பட்டது.

அவ்வாறு வாழாமல் நமக்கு இருக்கின்ற பிரச்சனைகளுக்கான காரணம், இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும், வெளியில் நாம் காண்பிக்கின்ற பர்சனாலிட்டிக்கும் நடுவில் நடக்கின்ற சண்டை.

இந்தச் சண்டைக்குக் காரணம், எதை எடுத்தாலும் விமர்சித்துக் கொண்டே இருக்கின்ற மன அமைப்பு.

இந்த மன அமைப்பு மாறவேண்டுமானால், எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு விஷயத்தின் மூலமாகவும், நமக்குள்ளே சேர்க்கப்படும் சாரத்தைக் கண்டு ரசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொன்றின் மூலமாகவும் நமக்குள் ஏதோவொரு சாரம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

ஏதோ ஒரு ரசம் அளித்துக்கொண்டே இருக்கிறது.

நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற ஒவ்வொரு படியுமே ஏதோ ஒரு விஷயத்தை நமக்குள் இணைத்து விட்டுச் செல்கிறது.

ஏதோ ஒரு விஷயத்தை, நமக்குள் மலர வைத்துவிட்டுச் செல்கின்றது.

ஏதோ ஒரு புரிந்து கொள்ளுதலை, நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாற்றிவிட்டுச் செல்கின்றது.

இதை நாம் பார்க்கத் தெரிந்து கொண்டோமானால், வாழ்க்கையே மங்களம்.

"வாழ்க்கை என்பது மங்களத்தில் இருந்து பொங்கி, மங்களத்தன்மையாக வெளிப்படுகின்ற சத்தியம் என்பது புரியும்."

பிரபஞ்சம் ஒவ்வொரு நிமிடமும் மங்களத்தன்மையை உங்களுக்காகப் பார்த்துப் பார்த்து ஊட்டிக் கொண்டிருக்கிறது.

நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற ஒவ்வொரு படியுமே ஏதோ ஒரு விஷயத்தை நமக்குள் இணைத்து விட்டுச் செல்கிறது. ஏதோ ஒரு விஷயத்தை நமக்குள் மலர வைத்துவிட்டுச் செல்கின்றது. ஏதோ ஒரு புரிந்து கொள்ளுதலை நம்முடைய வாழ்க்கையின் பாகமாக மாற்றிவிட்டுச் செல்கின்றது.

மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் பொ‌ன்னான வா‌க்குகள‌்

மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் பொ‌ன்னான வா‌க்குகளை ‌பி‌ன்ப‌ற்‌றி அத‌ன்படி நட‌ப்போ‌ம்.

சுத‌ந்‌திர‌த்தை நாடு‌ம் ம‌னித‌ன் ம‌ற்றவ‌ர்களை அடிம‌ை‌ப்படு‌த்துவது ப‌ற்‌றி எ‌ண்ண‌க் கூடாது.

சீ‌ர்‌திரு‌த்தவா‌தி‌யி‌ன் பாதை ரோஜா மல‌ர்க‌ள் தூவ‌ப்‌ப‌ட்டத‌ல்ல.

எ‌தி‌ரியை அ‌ன்‌பினா‌ல் ம‌ட்டுமே வெ‌ற்‌றி கொ‌ள்.

உழை‌ப்‌பி‌ன்‌றி உ‌ண்பவ‌ர்களை ‌திருட‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் கூற வே‌ண்டு‌ம்.

வத‌ந்‌திகளை பர‌ப்பு‌ம் ம‌னித‌ன் தன‌்‌க்கு‌ம் சமுதாய‌த்‌தி‌ற்கு‌ம் பெரு‌ங்கே‌ட்டினை உ‌ண்டா‌க்கு‌கிறா‌ன்.

கால‌ம் உறு‌‌தியான ந‌ண்பனாகவு‌ம் இரு‌க்‌கிறது. அதே சமய‌ம் கருணைய‌ற்ற பகைவனாகவு‌ம் இரு‌க்‌கிறது.

தா‌ர்‌மீக ‌விளைவுகளை ஒழு‌க்கமான க‌ட்டு‌ப்பா‌ட்டா‌ல்தா‌ன் ஏ‌ற்படு‌த்த முடியு‌ம்.

அணு‌க்க‌ள் இடையே இணை‌க்கு‌ம் ச‌க்‌தி இரு‌ப்பதா‌ல்தா‌ன் இ‌ந்த உலகமானது பொடி‌‌ப்பொடியாக உ‌தி‌ர்‌ந்து ‌விழாம‌ல் இரு‌ப்பதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கூறு‌கிறா‌ர்க‌ள்.

அதுபோலவே, உ‌யி‌ர்க‌ளிட‌த்து‌ம் அ‌ன்பு எ‌ன்னு‌ம் இணை‌க்கு‌ம் ச‌க்‌தி இரு‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌ன்பு உ‌ள்ள இட‌த்‌திலேயே உ‌யி‌ர் இரு‌க்‌கிறது.

பகைமை அ‌ழிவை‌த் தரு‌கிறது.

ம‌னித ச‌க்‌தி இ‌ன்னு‌ம் ‌ஜீ‌வி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பத‌ற்கு‌க் காரண‌ம் இணை‌க்கு‌ம் ச‌க்‌தியே. இது ‌பி‌ரி‌க்கு‌ம் ச‌க்‌தியை ‌விட பெ‌ரியது.

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை.

சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக, நபிகள் நாயகம் (ஸல்) கீழ்க்கண்ட விதிகளை கூறியுள்ளார்.

அதாவது, இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி கிடப்பதால் எளிதில் முதும¨ அடைந்துவிடுவீர்கள். 
மூச்சு விடாமல் தண்ணீர் குடிக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு குடிப்பதும், குடிக்கும்போது பிஸ்மில்லாஹ் (எல்லாம் இறைவனால் நடக்கிறது) என்று கூறி குடியுங்கள்.
தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை" எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், "உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்" என்றார்.

"மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

இறுதியாக, "உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்"

நான் கேட்டேன், "என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?"

"மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்" என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

"எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்" என்று கேள்வி எழுப்பினேன் நான்.

"அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்" என்றார் அவர்.

"அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?" என்று வியந்தேன் நான்.

"ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்" என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை.

குடித்த பிறகு அல்ஹம்துலில்லாஹ் (இறைவனுக்கு நன்றி) என்று கூறுங்கள்.

இடது கையால் உண்ணவோ நீர் அருந்தவோக் கூடாது. ஏன் என்றால், ஷைத்தான் அப்படித்தான் செய்யும்.

உணவில் வீண் செலவும் ஆடம்பரமும் வேண்டாம். முடிந்தவரை உணவை தர்மம் பண்ணுங்கள்.

வயிறு நிறைய சாப்பிட்டீர்களானால், இறுதிக் காலத்தில் சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். தினமும் இறைச்சியைத் திண்ணும் குடும்பத்தார் மீது இறைவன் கோபமடைகிறான்.

பெ‌ற்றோ‌ரி‌ன் ‌க‌ண்டி‌ப்பா‌ல் முறைதவறு‌ம் குழ‌ந்தைக‌ள்

பெ‌ற்றோ‌ரி‌ன் அ‌தீத க‌ண்டி‌ப்பா‌ல் ‌சில குழ‌ந்தைக‌ள் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியேறுவது‌ம், தவறான பாதை‌யி‌ல் செ‌ல்வது‌ம் த‌ற்போது அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. குழ‌ந்தைக‌ளிட‌ம் க‌ண்டி‌ப்பாக இரு‌க்க வே‌ண்டியதுதா‌ன். ஆனா‌ல் எடு‌த்தத‌ற்கெ‌ல்லா‌ம் கோப‌ப்படுவது ‌மிகவு‌ம் தவறு எ‌ன்று இ‌ந்த ச‌ம்பவ‌ம் உண‌ர்‌த்‌தியு‌ள்ளது.

செ‌ன்னை பெர‌ம்பூ‌ர் ‌ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் வெகு நேர‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த இர‌ண்டு ‌சிறுவ‌ர்களை அ‌ங்‌கிரு‌ந்த ஆ‌ட்டோ ஓ‌ட்டுந‌ர்க‌ள் அழைத‌்து ‌‌விசா‌ரி‌த்தன‌ர். அ‌‌தி‌ல், அ‌ந்த ‌சிறுவ‌ர்க‌ள் தா‌ங்க‌ள் க‌ட‌த்த‌ப்ப‌ட்டதாக‌வு‌ம், கட‌த்த‌ல்கார‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து த‌ப்‌‌பியதாகவு‌ம் கூ‌றியதா‌ல் உடனடியாக அவ‌ர்களை காவ‌ல்‌நிலைய‌‌த்‌தி‌ல் ஒ‌ப்படை‌த்தன‌ர்.

செ‌ம்‌பிய‌ம் கா‌வ‌ல்‌நிலைய அ‌திகா‌ரிக‌ள் அ‌ந்த ‌சிறுவ‌ர்களை ‌விசா‌ரி‌த்தன‌ர். அ‌தி‌ல் அவ‌ர்க‌ள் மு‌‌ன்னு‌க்கு‌ப் ‌பி‌ன் முரணாக‌ப் பே‌சியதா‌ல், உ‌ண்மையை‌க் கூறு‌ம்படி‌க் கே‌ட்டு‌க் கொ‌ண்டன‌ர்.

அத‌‌ற்கு அ‌ந்த ‌சிறுவ‌ர்க‌ள், த‌ங்களது உ‌ண்மையான ‌விவர‌த்தை அ‌‌ளி‌த்த‌ன‌ர், ஒருவ‌ன் சதீஷ் (வயது 13), ம‌ற்றவ‌‌ன் சந்தோஷ் (வயது 8) என்பதும் அவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இ‌தி‌ல் ச‌தீஷ‌் கூறுகை‌யி‌ல், நா‌ன் பெங்களூர் அக்ரஹாரம் 5-வது தெருவில் வசித்து வருகிறேன். என் அப்பா சுரேஷ் மிகவும் கண்டிப்பானவர். என்ன செய்தாலும் கோபப்படுவார். வீட்டை விட்டு விளையாட சென்றாலும் திட்டுவார்.

நேற்று முன்தினம் எங்கள் வீட்டு முன்பு பக்கத்து வீட்டு சிறுவன் சந்தோஷ்டன் காற்றாடி விட்டு விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே அப்பாவின் நண்பர் சந்திரன் வந்தார். அவர் என்னிடம், நீ காற்றாடி விட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாயா? உன் அப்பாவிடம் சொல்கிறேன் என்றார். இதைக்கேட்டதும் எனக்கு பயம் ஏற்பட்டது. பயத்தில் பக்கத்து வீட்டு பையன் சந்தோஷுடன் சென்னைக்கு ரெயில் ஏறி வந்து விட்டேன். இ‌ங்கே எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று தெ‌ரியாம‌ல் மு‌ழி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். ‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்து வ‌ந்தோ‌ம் எ‌ன்று சொ‌ன்னா‌ல் அ‌ப்பா ‌தி‌ட்டுவா‌ர் எ‌ன்று பய‌ந்து, எங்களை யாரோ கடத்தி வந்து விட்டார்கள் என்று பொய் சொன்னோம். இதை அப்பாவிடம் சொல்லி விடாதீர்கள் எ‌ன்று கூ‌றி அழுதா‌ன்.

உடனடியாக குழ‌ந்தைகளு‌க்கு உணவு கொடு‌க்க‌ப்ப‌ட்டு அவ‌ர்களு‌க்கு அ‌றிவுரை‌க் கூற‌ப்ப‌ட்டது. அவ‌ர்களது ‌பெ‌ற்றோ‌ர்களு‌க்கு‌ம் ‌விவர‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

குழந்தைகளை அன்புடன் நடத்த வேண்டும். இல்லையென்றால் இது போல் குழந்தைகள் வழி தவறி செல்வது உண்டு. பொய் சொல்லக்கூடிய சூழ்நிலையையும், தவறான பாதைக்கும் அவர்களை அழைத்து செல்கிறது. பெங்களூரில் இருந்து வந்து கடத்தல் நாடகம் ஆடிய மாணவர்களிடம் போதுமான அறிவுரைகளை சொல்லியிருக்கிறோம். அவர்களின் பெற்றோர்கள் வந்தவுடன் இது குறித்து அவர்களிடமும் நாங்கள் பேசுவோம் எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ஈக்வடார் நாட்டு மழைக்காடுகளை நச்சு மயமாக்கியுள்ள அமெரிக்க எண்ணெய் நிறுவனம்

ஈக்வடார் நாட்டின் வளமான அமேசான் மழைக்காடுகளில் கடந்த 26 ஆண்டுகாலமாக கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுத்து வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் எண்ணை உற்பத்தி நிறுவனமான செவ்ரான் சுமார் 18 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) காலன்கள் கொடிய நச்சுக் கழிவுகளை அங்கு கொட்டி வருகிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலருக்கும் புற்று நோய் ஏற்பட்டுள்ளது. கருச்சிதைவு, உடல் ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட மிக மோசமான நோய்கள் உருவாகியுள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதாவது செர்னோபில் அணுக்கசிவைக் காட்டிலும் 30 மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சுத் தன்மையுள்ள கழிவுகளை 1979ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை கொட்டியுள்ளது. இன்னமும் கொட்டி வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஐந்து பூர்வக்குடியினர் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், உலகின் மிக மோசமான நச்சுக் கழிவு தொடர்பான பேரழிவு ஏற்படும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால் வழக்கம் போல் அந்த நச்சுக்கழிவினால் ஆபத்து ஒன்றும் இல்லை அது உடம்புக்கு நல்லது என்றே கூறிவருகிறது இந்த அமெரிக்க அரக்க எண்ணெய் நிறுவனம்.

இந்த செவ்ரான் என்ற நிறுவனம் சுற்றுச்சூழல் மோசடிகளுக்கு பெயர் பெற்ற நிறுவனம் என்று ஏற்கனவே பெயர் எடுத்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, காசுக்காக அறிவை விற்றுப் பிழைக்கு கார்ப்பரேட் போலி விஞ்ஞானிகள் மூலம் அந்தக் கழிவுகளில் நச்சு ஒன்றும் இல்லை என்று சத்தியம் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் 30 ஆண்டுக்கால மோசடிகளை எதிர்த்து 2003ஆம் ஆண்டு வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு, இது போன்ற பொறுப்பற்ற, ஏழை மக்களின் உயிரை கடுகளவும் மதிக்காஅமெரிக்க, ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கால்பந்து மைதான அளவு இடப்பரப்பு உள்ள இடங்கள், ஓடைகள், நதிகள் என்று அப்பாவி மக்கள் புழங்கும் எந்த ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் படு பயங்கர புற்று நோயை உருவாக்கும் இந்த நச்சுக் கழிவை செவ்ரான் நிறுவனம் அராஜகமாக கொட்டி வருகிறது. சுமார் 700க்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது ஏக்கர் கணக்கில் இந்த உயிர்க்கொல்லி நச்சுக் கழிவைக் கொட்டி வைத்துள்ளது செவ்ரான்.

இதோடு மட்டுமல்லாமல் தற்போது இந்த நச்சுக் கழிவுகள் நிலத்தடி நீரிலும் கலந்து வருகிறது. மேலும் இந்த நச்சுக் கழிவு நதிகள் மூலம் பெரூ நாட்டிற்கும் செல்கிறது. குடிநீருக்கு வேறு வழியில்லாமல் இருக்கும் அப்பகுதி மக்கள், இந்த நீரை தினமும் அருந்தி, அதில் குளித்து தங்கள் உடலை கொஞ்சம் கொஞ்சமாக நச்சுமயமாக்கிக் கொள்கின்றனர்.

ஈக்வடாரில் குழந்தைப் பருவ லுகேமியா என்ற கொடிய நோய் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதியில் 4 மடங்கு அதிகமாக உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சாதரணமாக இறக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த அனைவரும் தற்போது இந்த நச்சுக்கழிவின் தாக்கத்தினால்தான் இறந்துள்ளனர் என்ற பயங்கர உண்மையும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் எண்ணெய் உறிஞ்சும் இந்த நிறுவனம், அங்கு இந்த நச்சுக் கழிவுகளை அகற்ற உயர் தொழில் நுட்பத்தை கடைபிடித்து வருகிறது. ஆனால் ஈக்வடாரில் தனது எண்ணெய் உறிஞ்சுதல் நடவடிக்கைகளை துவங்கியபின் இந்த கழிவகற்ற உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை.

இதம் மூலம் பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர்கள் மிச்சம் பிடிப்பதோடு, மொத்த காலன்கள் உற்பத்தியில் 4.5 பில்லியன் டாலர்கள் மிச்சம் பிடிக்கிறது செவ்ரான்!

இந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வரும் இந்த மைல் கல் வழக்கின் மீதான தீர்ப்பை எதிர்பார்த்து பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.